மெக்சிகோவில் மக்களை பயமுறுத்த பயன்படுத்தப்பட்ட பொம்மைக்கு போலீசார் விலங்கு மாட்டிய சம்பவம் நடந்துள்ளது. கார்லெஸ் என்பவர் சக்கிடால் என்ற பேய் பொம்மையை வைத்து பொதுமக்களை பயமுறுத்தியுள்ளார். பொம்மை கையில் கத்தியை வைத்து சாலையில்  வருவோர் மீது தூக்கி வீசி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இந்த குற்றத்திற்காக போலீசார் அவருடன் சேர்த்து பொம்மையையும் கைது செய்தனர். அதன் பிறகு காவல் நிலையத்தில் குற்றவாளி போல பொம்மைக்கு விலங்கு மாட்டி புகைப்படம் எடுத்தனர். தற்போது அது தொடர்பான செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.