பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு மேலும் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து இரண்டு சுயாதீன இயக்குநர்கள் ராஜினாமா செய்தனர். வாரியத்தின் இயக்குநர்கள் பதவியில் இருந்து ஷின்ஜினி குமார் மற்றும் மஞ்சு அகர்வால் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது.

குழுவில் மற்ற மூன்று சுயாதீன இயக்குநர்கள் மட்டுமே உள்ளனர். நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற மஞ்சு, எஸ்பிஐயில் 34 ஆண்டுகள் பணியாற்றியவர். ஷின்ஜினி பாங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் சிட்டி வங்கியில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.