பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசின் சூப்பர் திட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. மக்களுக்கு வீடு வீடாக இலவச ரேஷன் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ‘கர்-கர் இலவச ரேஷன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களுக்கு ரேஷன் கிட்களை வழங்கினார்.

பஞ்சாப் அரசு தொடங்கியுள்ள திட்டத்தை அவர் பாராட்டினார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டம் என மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசை வீழ்த்தி, ஆம் ஆத்மி அம்மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.