பெங்களூரு அருகே உள்ள மகுடி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கோழி பண்ணை வைத்துள்ளார். இவரது கோழி பண்ணையில் 15 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் தின கூலியாக வேலை பார்த்து வந்துள்ளனர். அவர்கள் திடீரென நாகராஜிடம் இனி வேலை பார்க்க முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் தம்பதியை பழிவாங்க முடிவு செய்து அவர்களது 15 வயது மகள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது தான் வளர்க்கும் நாயை கட்டவிழ்த்து விட்டு கடிக்க செய்துள்ளார்.

நாய் கொடூரமாக தாக்கியதில் படுகாயம் அடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.