வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் மலப்புரம் அருகே கொண்டோட்டி பகுதியில் 2 வயது குழந்தை பாம்பு கடித்து உயிரிழந்தான். பெரிந்தல்மண்ணாவைச் சேர்ந்த அப்துல் கபூர் என்பவரது மகன் முகமது உம்மர் என்ற குழந்தை நேற்று வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது பாம்பு கடித்துள்ளது.

உடனே கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. குழந்தையின் மரணம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெற்றோர் கண்பார்வையில் குழந்தைகளை விளையாட விடுவது மிக முக்கியம்.