திருச்சியில் முசிறி அருகே சாலை பட்டியை சேர்ந்த பெரியசாமி மற்றும் வனிதா தம்பதியினருக்கு ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் தனது குழந்தையுடன் துறையூர் அருகே தவிட்டுப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வனிதா சென்றுள்ளார். அங்கு குழந்தை பாட்டிலில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த குழந்தை நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இது போன்ற பொருட்களை பெற்றோர்கள் அலட்சியமாக வைக்கக் கூடாது எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.