தமிழகத்தில் கோடை விடுமுறை என்பது மாணவர்களை அவர்களின் விருப்பப்படி விடக்கூடிய காலமாக இருக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் மாணவர்களை அழுத்தத்தில் தள்ளக்கூடாது. ஏனெனில் பெற்றோர்களே விடுமுறையில் வகுப்புகளுக்கு செல்லட்டும் என்று சொல்வதை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

இந்த கோடை விடுமுறை நாட்களே அடுத்த கல்வியாண்டில் மாணவர்கள் படிப்பதற்கான உந்து சக்தியாக இருக்கும். இந்த மாணவி முதலிடம், இந்த மாணவர் இரண்டாம் இடம் என்று விளம்பரப்படுத்துவது வேண்டாம். இது பிற மாணவர்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.