விருதுநகரை சேர்ந்த முத்தமிழ் செல்வி உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் தொட்ட பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், எவரெஸ்ட் ஏறுவது அத்தனை எளிதல்ல, தன்னம்பிக்கையுடன் அதற்கான முயற்சிகளை தொடங்கியிருந்தார் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரி முத்தமிழ் செல்வி.

தமிழ்நாட்டில் இருந்து முதல் பெண்மணியாக வெற்றிகரமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து அடிவாரம் திரும்பி உள்ளார். தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள முத்தமிழ் செல்விக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனை பயணங்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.