தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்த  விடுமுறையில், பெற்றோர்கள்தங்கள் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க சுற்றுலா செல்வார்கள்.அந்தவகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வண்டலூர் பூங்கா வருவது வழக்கம். எனினும், பூங்காவில் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்நிலையில், கோடைக்கால தொடர் விடுமுறை காரணமாக மே மாதம் முழுவதும் வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வைக்கு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.