சில பூச்சிகள் மனித உடலை தின்று மரணத்தை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது போன்ற சம்பவம் ஒன்று சீனாவில் நடந்துள்ளது. 77 வயது மூதாட்டி ஒருவர் பல நாட்கள் தலை சுற்றல், எரிச்சல் மற்றும் பேசுவதில் சிரமம் ஏற்பட்ட பிறகு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் அவருடைய முதுகுத்தண்டில் ஊசியை செலுத்தி பரிசோதனை செய்த போது மண்ணில் வாழும் அமீபா மூளைக்குள் நுழைந்தது தெரிய வந்தது. நோயாளி இறக்கும் வரை அது பரவியது. மருத்துவமனையில் எட்டு நாட்கள் சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி உயிரிழந்தார்.