துபாயில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் துபாயில் சிக்கி இருக்கும் இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால்  +971501205172, +971569950590, +971507347676, +971585754213  என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.