மத்திய பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும், வீட்டு பயன்பாட்டுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் மற்றும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பல்வேறு அதிரடியான அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகின்றார்.