விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டீக்கட் கூறியிருப்பதாவது “பேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் எங்கள் போராட்டத்திற்கு கிடைக்க வேண்டிய ரீச் கிடைக்கவில்லை என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அந்த அளவுக்கு போராட்டத்தை முடக்க நினைத்தார்கள்.

அதை தற்போது டுவிட்டரின் முன்னாள் CEO தெளிவுபடுத்தி இருக்கிறார். அத்தகைய பெரும் நிறுவனங்களுக்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் அழுத்தம் தர இயலாது. மத்திய அரசாங்கம் தான் அதை செய்திருக்க வேண்டும். டுவிட்டரின் முன்னாள் CEO ஜேக் டோர்சி சொல்வது உண்மைதான் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் டீக்கட் தெரிவித்தார்.