பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தின் கடலோரப் பகுதிகளிலிருந்து 8,000 பேர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். அரபிக் கடலில் அதி தீவிர புயலாக உருமாறி இருக்கும் பிபா்ஜாய் குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் போது குஜராத் மாநிலத்தின் கட்ச், தேவபூமி துவாரகா, போா்பந்தா், ஜாம்நகா், ராஜ்கோட், ஜுனாகா், மோா்பி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதோடு, காற்றின் வேகம் மணிக்கு 135 முதல் 145 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் மத்திய-மாநில அரசுகள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி குஜராத் கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் வசித்து வந்த 8,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.