தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது,  உமா மகேஸ்வரபுரம் சாலை. இச்சாலை பகுதி வழியாக வீரசோழன் என்ற ஆறு ஒன்று செல்கிறது. சம்பவத்தன்று இந்த ஆற்றங்கரையோர மதில் சுவர் அருகே அடையாளம் தெரியாத 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் திடீரென பெட்ரோல் குண்டினை வீசியாதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே இச்சம்பவம் குறித்து கொரநாட்டு கருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் திருவிடைமருதூர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருவிடைமருதூர் போலீசார், தனிப்படை அமைத்து இவ்வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அதன்படி அப்பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியது யார்? எதற்காக வீசினார்கள்?  வீசியதற்கான  காரணங்கள் என்ன? என்பது பற்றியும் போலீசார்  தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக தஞ்சையில் உள்ள தடயவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அந்த பகுதிக்கு வந்த தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் பொரி வைத்து தேடி வருகின்றனர்.