சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு வந்தே பாரத் துறையில் நவம்பர் 20 இன்று இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் காட்பாடிக்கு மாலை 6.48 மணிக்கு பெங்களூருக்கு இரவு பத்து மணிக்குள் சென்றடையும்.

அதனைப் போலவே மறுமார்க்கமாக யஷ்வந்த்பூரிலிருந்து நவம்பர் 21 இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் காட்பாடிக்கு நள்ளிரவு 2.28 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.20 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான பயண சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.