பூஜை நடத்தினால் புதையல் கிடைக்கும் எனக்கூறி 11 பேரை கொடூரமாக கொலை செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள நாகபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமதி சத்யநாராயணா என்கிற சத்யம். 53 வயதான இவர் தான் மந்திரவாதி என்றும் புதையல் எடுப்பதில் எக்ஸ்பர்ட் எனக் கூறி, பலரையும் நம்ப வைத்துள்ளார்.

புதையல் எடுத்து தருவதாக கூறி தனியாக அழைத்துச் சென்று 2018ஆம் ஆண்டில் தொடங்கி தற்போது வரை இவர் இதுவரை 11 பேரை கொலை செய்துள்ளார். போலீசார் இவரை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.