சமூக வலைத்தளமான எக்ஸ் (X) தளத்தில் தற்போது ஒரு பகீர் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், வயல்வெளியில் அமைதியாகப் புல் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டின் கழுத்தில், பெரிய நாகப்பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாகச் சுற்றிக்கொண்டது.

ஆட்டின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பதற்றமான சூழலில், அங்கு வந்த வாலிபர் ஒருவர் சிறிதும் பயமின்றி அந்தப் பாம்பை மிக லாவகமாகப் பிடித்து ஆட்டின் கழுத்திலிருந்து மீட்டார்.

“>

 

பார்ப்பவர்களை உறைய வைக்கும் இந்த வீடியோ, அந்த வாலிபரின் துணிச்சலான செயலுக்காகப் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.