மகாராஷ்டிரா மாநிலம் பல்சர் மாவட்டத்தை சேர்ந்தவர் தர்மவீர் வஷி கடந்த திங்கள் அன்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது பாட்டி ஆனந்தி தோக்கரீ குறை சொல்லிக் கொண்டும் தனக்குத்தானே புலம்பிக் கொண்டும் இருந்துள்ளார்.

இதனால் எரிச்சல் அடைந்த தர்மவீர் வஷி மரக்கட்டை ஒன்றால் தனது பாட்டியை தாக்கியுள்ளார். இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து முதாட்டியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு தர்மவீர் வஷியை கைது செய்துள்ளனர்.