ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் பிரகலாதரம் தான் பணிபுரியும் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாணவியின் பெற்றோர் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை வீட்டின் தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்த மாணவியின் பெற்றோர் வீட்டிற்கு வந்து மகளை தேடியபோது காணாததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் சடலமாக தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆசிரியர் பிரகலாதரமை தேடி வருகின்றனர்.