மிக்ஜாம் புயல் காரணமாக இன்று நடைபெற இருந்த பாரத ஸ்டேட் வங்கி அப்ரண்டீஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 15 மையங்களில் இன்று நடைபெற இருந்த அப்ரண்டீஸ் பணிக்கான தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.