தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதே சமயம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். இதில் முதல் கட்டமாக நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினர். அடுத்ததாக சாந்தனு, kpy பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா என அடுத்தடுத்து பிரபலங்கள் பலரும் மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் வடிவேலு 6 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். வெள்ள நிவாரண பணிகளுக்கு உதவும் வகையில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அமைச்சர் உதயநிதியை சந்தித்து 6 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வடிவேலு வழங்கினார். இருவரும் மாறி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.