ரூபாய் 6000 நிவாரண உதவி திட்டத்தை டிசம்பர் 17ஆம் தேதி வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய  நான்கு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு ரூ 6000 நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை 17ஆம் தேதி முதல் நிவாரணம் தரப்பட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் ரூபாய் 6000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை டிசம்பர் 17ஆம் தேதி சென்னை வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார்..