சென்னை புத்தகக் காட்சி இன்று இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நந்தனம் ymca மைதானத்தில் 47வது புத்தகக் காட்சி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. ஒரு நாள் விடுமுறை தவிர 17 நாட்களில் ஒன்பது லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர். சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. வழக்கமாக இரவு 8.30 மணி வரை செயல்படும் புத்தக கண்காட்சி இன்று இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.