அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல மாநிலங்களிலும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில் தமிழகத்திலும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. விடுமுறை அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், பாஜகவின் எச்.ராஜா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.