திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநாடு இன்று சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இன்னும் 2000 ஆண்டுல ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் பாஜக காலை வைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழர்களின் அடையாளத்தை அளிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள் என்றும் கூறியுள்ளார். மத்திய அரசை கேள்வி கேட்டால் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ வரும் என மிரட்டுகிறார்கள். இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக தொண்டன் மட்டுமல்ல தொண்டன் வீட்டு குழந்தை கூட பயப்படாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  திமுகவினர் ED-க்கும் பயப்பட மாட்டோம் மோடிக்கும் பயப்பட மாட்டோம்  என்று தெரிவித்துள்ளார்.