தேசிய விடுமுறை நாட்கள், பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் அனைவருக்கும் விடுமுறை நாட்கள் ஒன்றாக அறிவிக்கப்படும். ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நடைபெறும் திருவிழாக்கள் போன்ற பண்டிகைகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதன்படி புதுச்சேரியில் உள்ள வீராணம் பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள நிலையில் விழாவின் முக்கிய நாளான தேர் திருவிழா இன்று சிறப்பிக்கப்பட உள்ளது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.