தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில் தமிழ்கனவு என்ற சொற்பொழிவு நிகழ்ச்சியானது தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

அப்போது முதலமைச்சரின் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் படிப்பை கைவிட்ட 13 ஆயிரம் மாணவிகள் மீண்டும் கல்லூரிகளில் சேர்ந்து உள்ளனர் என்று  அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.  பெண்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுமைப் பெண் என்ற திட்டத்தை செயல்படுத்தி உள்ளார் என்றார்.