புதுச்சேரியில் சமீபத்தில் 9 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.. இரண்டு நாட்களாக காணாமல் போன அந்த சிறுமி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் அதே போன்ற சம்பவம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. ஊரப்பாக்கம் பகுதியில் நேற்று மாலை காணாமல் போன மூன்று வயது சிறுவன் இன்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். உயிரிழப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.