சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகரில் விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோஸ்னா(17) தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பெற்றோர் கடைக்கு சென்ற நேரம் ஜோஸ்னா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஜோஸ்னா தனது தந்தையிடம் புதிதாக ஷூ தருமாறு கேட்டார். அதற்கு விநாயகமூர்த்தி மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.