தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் அரசு பள்ளிகளில் 91.02%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.40 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் தனியார் சுயநிதி பள்ளிகளில் 98.70%, பெண்கள் பள்ளிகளில் 96.89 சதவீதம், ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் 88.98 சதவீதம், இருபாலர் படிக்கும் பள்ளிகளில் 94.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இருபாலர் படிக்கும் பள்ளிகளை விட ஆண்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு.