தமிழகத்தில் வருகிற மார்ச் 13-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு, 14-ஆம் தேதி பிளஸ் ஒன் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரையில் 198 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பிளஸ் டூ தேர்வை 19,877 பேரும் பிளஸ் ஒன் தேர்வு 1,710 பேரும் எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை இவர்களுக்கான செய்முறை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பள்ளிகளுக்கு விடைத்தாள்கள் அனுப்பும் பணி நடைபெற்று வந்தது. தற்போது பள்ளிகளில் டாப் சீட்டுடன் விடைத்தாள்களை இணைத்து தைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகள் அனைத்தும் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.