பிறப்பு சான்றிதழில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவதை மத்திய உள்துறை அமைச்சகம் கட்டாயமாக்கி உள்ளது. குழந்தைகளை தத்தெடுக்கும் பெற்றோருக்கும் இந்த விதிகள் பொருந்தும். இந்த புதிய விதிமுறைகளுக்கு பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்ததை தொடர்ந்து, இந்த நடைமுறை முழுக்க முழுக்க புள்ளி விவரங்களுக்கானது என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.