ஜூன் 9ம் தேதிக்குள் பிரிஜ் பூஷனை கைது செய்யாவிடில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என விவசாய சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக பாஜக எம்பி பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள், அண்மையில் ஒலிம்பிக்கில் வாங்கிய பதக்கங்களை கங்கையில் வீச முயன்றனர். அவர்களை தடுத்து விவசாய சங்கத்தினர் சமாதானப்படுத்தினர்.

இந்நிலையில் பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும், இல்லையெனில் ஜூன் 9ஆம் தேதி மல்யுத்த வீரர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தருக்கு பேரணி சென்று, நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.