தற்போதைய இணைய உலகில் வித்தியாசமான தீம்களில் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பாம்புடன் காதல் ஜோடி ஒன்று எடுத்த போட்டோஷூட் வைரலாகி வருகிறது. இளம்பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த பாம்பை பிடிக்க வரும் இளைஞருக்கும், அந்த பெண்ணுக்கும் காதல் மலர்வது போன்று புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இறுதியில் அவர்கள் இருவரும் இணைந்து நிற்க, அவர்களுக்குப் பின் பக்கம் பாம்பு படமெடுத்து நிற்கிறது. இப்படியாக அந்த போட்டோக்கள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ளது. உங்க கிரியேட்டிவிட்டிக்கு ஒரு அளவு இல்லையா என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.