ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில் சரக்கு ரயிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. காட்டுப்பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இருள் நிறைந்திருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு நிலவுகிறது.

இந்நிலையில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே உதவி எண்கள் அறிவித்துள்ளது. அதன்படி  044-25354771 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விபரங்களை கேட்கலாம் என்று தெரிவித்துள்ளது.