தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம் என சுமார் 200-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் ப்ருத்விராஜ். இறுதியாக இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கண்ணான கண்ணே எனும் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் கடந்த வருடம் பொது நிகழ்ச்சியில் என்னை ஆரோக்கியமாக கவனித்துகொள்வது மனைவி தான் என 24 வயது இளம் பெண்ணை அறிமுகப்படுத்தி இருந்தார்.

முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 54 வயதில் இப்படி 24 வயது பெண்ணை மறுமணம் செய்துள்ளீர்களே என சமூகவலைதளங்களில் பல விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் ப்ருத்விராஜ் என்ற பப்லு தன் காதல் மனைவி உடன் மகிழ்ச்சியாக இருக்க 5 நட்சத்திர ஹோட்டலில் ரூம் போட்டுள்ளாராம். அந்த ஹோட்டலில் ஒரு இரவுக்கு ரூபாய்.94 ஆயிரம் வாடகை கொண்ட அறையை புக் செய்துள்ளாராம்.