பிரபல பரதநாட்டிய கலைஞரான லட்சுமி விஸ்வநாதன் (79) இன்று சென்னையில் காலமானார். பரதநாட்டிய உலகில் தனித்துவம் மிக்க கலைஞரும், பேச்சாளரும், எழுத்தாளரும் பதம் என்னும் நாட்டிய உருப்படிகளின் மேதையுமான அவர் கலைமாமணி விருது பெற்றுள்ளார். வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், இன்று காலை உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.