கன்னட நடிகர் சம்பத் ஜே ராம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 36 வயதாகும் இவர் அக்னிசாட்சி உள்ளிட்ட கன்னட சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சமீபத்தில் ஸ்ரீ பாலாஜி போட்டோ ஸ்டூடியோ படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் சம்பத் நேற்று அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சினிமாவில் போதிய வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் போலீசார் வழக்கு பதிவு செய்து இவரின் தற்கொலைக்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரின் மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.