தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்த பிரபு தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வருகிறார். இவர் கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய வெள்ளாளர் பூதி விக்ரமகேசரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் உள்ள கோடம்பாக்கம் மருத்துவமனையில் பிரபு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரிய வந்ததால் லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டது. அதன் பிறகு சிறுநீரகத்தில் கல் அடைப்பு பாதிப்புக்கு நடிகர் பிரபுவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் பிரபு தற்போது சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரபு சிறிது நாட்கள் ஓய்வெடுத்து விட்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.