வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சென்ற மாதம் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதால் அஜித்துக்கு புதுவேகத்தை தந்திருக்கின்றது. இத்திரைப்படத்தை அடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தது. சென்ற வருடம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவனின் கதை அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு உடன்பாடு இல்லாத காரணத்தினால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டாராம். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஏகே 62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகின்றார் என கூறப்பட்டு வருகின்றது. இது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் மகிழ் திருமேனியின் கதை அஜித்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் பிடித்திருப்பதாகவும் இந்த படத்தில் சண்டை காட்சிகளை சேர்க்க அஜித் வலியுறுத்தி இருக்கின்றாராம்.

அதற்கு ஏற்றார் போல் ஆக்சன் காட்சிகளை படத்தில் சேர்த்து இருக்கின்றார் மகிழ் திருமேனி. இதனால் படத்தின் பட்ஜெட் அதிகமாகும் என மகிழ் திருமேனி லைக்கா நிறுவனத்திடம் கூறியிருக்கின்றார். லைக்கா நிறுவனமும் பணம் பற்றி எந்த கவலையும் வேண்டாம். காட்சி சிறப்பாக இருந்தாலே போதும் என கிரீன் சிக்னல் காட்டி இருக்கின்றது. இதனால் அஜித்தும் மகிழ்ந்திருமேனியும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.