தெலுங்கு திரை உலகின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் ஒளிப்பதிவாளருமான மன்னம் சுதாகர் (62) காலமானார். சென்னையில் தங்கி மூன்று மாதங்களுக்கு முன்பு குளியல் அறையில் தவறி விழுந்த இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இவர் வாலி, ஆக்ரோஷம், சேவ குடு, நா மனசிஸ்டாரா , தாரகரமூடு ஆகிய திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.