மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முகலூரில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மார்க்க சகாய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர் சேதமடைந்து இருப்பதால் புதிய தேர் செய்து தேரோட்டம் நடத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை நிறைவேற்றும் வகையில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அந்த கோவிலுக்கு புதிய தேர் செய்வதற்காக 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.

நேற்று புதிய தேர் செய்வதற்கான பணி சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது. இதற்கு கோவில் செயலாளர் அன்பரசன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து திமுக மேற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான மூவலூர் மூர்த்தி சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு புதிய தேர் செய்வதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளார்.