சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு எறிபந்து கழகத்தின் அனுமதியுடன் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவில் எறிபந்து போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் விளையாட கரூர் மாவட்ட அணியில் அரவக்குறிச்சி அரசு மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் கவியரசு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வான கவியரசுவை கல்லூரி முதல்வர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் சக மாணவர்கள் பாராட்டியுள்ளனர்.