பிரபல தெலுங்கு பாடலாசிரியர் ஆருத்ராவின் மனைவியான கே.ராமலட்சுமி(92) வயது மூப்பு மற்றும் உடல்நலகுறைவு காரணமாக மார்ச் 3 ஆம் தேதி காலமானார். இவர் புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளராகவும் இருந்தவர் ஆவார். ராமலட்சுமியின் முதல் நாவல் கடந்த 1951ல் வெளியாகியது.

அவதாலி காட்டு, மெருப்பு தீகா, மனனி காயம், ஆணிமுத்யம், பெல்லி உள்பட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அதோடு பெண்களின் உரிமைகளுக்காக போராடும் வக்கீலாகவும் பிரபலமடைந்தார் ராமலட்சுமி. இவரது இறப்புக்கு திரையுலகினர், பிரபலங்கள், இலக்கியவாதிகள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.