வாட்ஸ்அப் சேனலில் பிரதமர் மோடியை  பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை லட்சங்களை கடந்தது.  கடந்த வாரம் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய சிறப்பம்சமான வாட்ஸ்அப்பில் சேனல் உருவாக்கும் முறையை அறிமுகம் செய்தது. இந்த வாட்ஸ்அப்பில் வசதியில், எழுத்து வடிவ தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் அனுப்பும் வசதி உள்ளது.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி மாலை பிரதமர் மோடி, தனது அலுவலகத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கணக்கை தொடங்கினார். இணைந்த ஒரே நாளில் (24 மணிநேரத்தில்) அவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்து உள்ளது