இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 17-ந்தேதி பிறந்தநாள் கொண்டாட இருக்கிறார். 73 வயதை நிறைவு செய்து 74-வது வயதில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.இந்நிலையில்  பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்தநாளை (செப்.17) முன்னிட்டு பொதுமக்களுக்கு சேவை செய்யவும், தூய்மை பணிகளில் ஈடுபடுமாறும் பாஜக எம்.பிக்களுக்கு ஜே.பி.நட்டா அறிவுறுத்தியுள்ளார்.

செப்.17-அக். 2 வரை “15 நாட்கள் சேவை” என்ற பெயரில் ரத்த தான முகாம் நடத்தவும், ஆயுஷ்மான் திட்டத்தில் பயனாளிகளை இணைக்கும் பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் பாஜகவினர் இதேபோன்ற பணிகளில் ஈடுபட்டனர்.