செம்பரம்பாக்கம் ஏரியில் மதகுப் பராமரிப்பு பணி நடைபெற இருக்கின்ற காரணத்தினால் சென்னை, அண்ணாநகர், அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிநீர் செவ்வாய்க்கிழமை  நிறுத்தப்பட உள்ளது. இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, செம்பரம்பாக்கம் ஏரி மதகுபணி நீர்வளத்துறையினர் மேற்கொள்ள இருக்கின்றனர். இதனால் பகுதி 7,8,9,10,11, 12 மற்றும் 12 பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

மேலும் அண்ணாநகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், தேனாம்பேட்டை, ஆலந்தூர் மற்றும் அடையாறுக்கு உட்பட்ட பகுதிகளில் 14-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை குடிநீர் வினியோகம் இருக்காது. அதனால் பொதுமக்கள் தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். அதேபோல் அவசர தேவைக்கு லாரிகள் மூலமாக குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெருநடைகளுக்கு லாரிகள் மூலமாக வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையும் இல்லாமல் சீரான முறையில் வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளது.