இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரிசியின் விலை அதிகரித்ததால் விலைவாசியை கட்டுப்படுத்த ஏற்றுமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்தது. இதனால் அரிசியில் விலை உள்நாட்டில் கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதங்களில் அரிசி விளைச்சல் உற்பத்தி பாதிப்பு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக தொடர்ந்து அரிசி விலை உயர்ந்து வருகின்றது. இதனால் பாதிக்கப்படும் சாமானிய மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு பாரத் அரிசி என்ற மானிய விலை அரசு திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்க்கு மத்திய அரசின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் மூலம் சில்லறை சந்தைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் கிடைக்கும் பாரத் அரிசி இணையவழி விற்பனை மூலம் சந்தைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. எனவே வருகின்ற பிப்ரவரி 9 முதல் ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.