விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளானர். தற்போது ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இதிலிருந்து அனன்யா, பவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, பிரதிப், ஐஷு, கானா பாலா என 9 பேர் வெளியேறி இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது ஐம்பதாவது நாளை கடந்து செல்லும் பிக்பாஸில் யாரும் எதிர்ப்பாராத திருப்பமாக  போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்று நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸில் இந்த வாரம் விஜய் வர்மா, அனன்யா ஆகியோர் மீண்டும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வரவுள்ளனர். பிக்பாஸில் அக்ஷயா மற்றும் ஆர்.ஜே.பிராவோ நடந்து முடிந்த 3 ‘பூகம்பம் டாஸ்க்’குகளில் 2ல் தோற்றதால், 2 பேர் வெளியேற்றப்பட்டு 2 பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வரவுள்ளனர். அதன்படி, விஜய் வர்மா மற்றும் அனன்யா ஆகியோர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். இதனால் போட்டி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.